பச்சப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி மாணவர்களுக்கு சாப்பாடு தட்டு 30 பேருக்கு SEED NGO சார்பாக வழங்கப்பட்டது…

இன்று 22.8.22, செவ்வாய் கிழமை, கரூர் மாவட்டம், கரூர் வட்டம், வெள்ளியணை தென்பாகம் பச்சப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி, சு.பகுத்தறிவு அவர்கள், உதவி ஆசிரியர் திருமதி, ச. செல்வி அவர்கள், திருமதி சுதா, சத்துணவு அமைப்பாளர், சிறப்பு விருந்தினர் திரு சரவணன், வெள்ளியணை – CRC, அவர்கள் மற்றும் பாலா அறக்கட்டளை சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளரும், சமூக ஆர்வலருமான திரு, இரா. பாலமுருகன் அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இதில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு சாப்பிட, சாப்பாடு தட்டு 30 பேருக்கு SEED NGO (www.seedngokarur.com) சார்பாக பாலா அறக்கட்டளையின் (www.balatrust.in) ஒருங்கிணைப்பாளர் திரு, இரா. பாலமுருகன் அவர்கள் வழங்கினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *